Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம்
பெரம்பலூரில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் வருவாய் கிராமத்திற்குட்ட அருமடல் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் திரளான விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பெற்று பயன் அடைந்தனர்.விவாசயிகள் பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் தெளிவாக பதில் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, வேளாண்மை அலுவலர் சௌமியா, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், அம்பிகா , பரிசோதனை நிலையம் மூத்த வேளாண்மை அலுவலர் வேல்முருகன்,பகுதி உதவி வேளாண்மை அலுவலர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்