/* */

பெரம்பலூர் கடைவீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் தடையை மீறி செயல்பட்ட கடைகளுக்கு மாநகரட்சி ஆணையர் குமரி மன்னன் சீல் வைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் கடைவீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

144 தடை உத்தரவு மீறி கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்த ஒரு மளிகை கடைக்கு  சீல் வைத்த நகராட்சி ஆணையர். 

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட கடை வீதி, தபால் நிலைய பகுதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளுக்கு கொண்டு வரப்படும் பார்சல் மூட்டைகளை ஆய்வு செய்ததில் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் 144 தடை உத்தரவை மீறி கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்த மளிகை கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஆய்வின் போது துப்பரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன், துப்பரவு மேற்பார்வையாளர் ராஜ்குமார் உட்பட நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.




Updated On: 13 Aug 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?