Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் ரூ 1,22,500 பறிமுதல்
பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி லஞ்ச பணம் ரூ. 1,22500 ஐ பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம், சார் -பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவிற்கு அதிகமாக லஞ்சம் பெறுவதாக வந்த தொடர் புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அலுவலக உதவியாளர் இளங்கோவன் என்பவரிடமிருந்து ரூ. 2,500 பணமும்,புரோக்கர் ராஜ்குமார் என்பவரிடமிருந்து ரூ. 1,22,500கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.