பெரம்பலூரில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
ராகுல் காந்தி பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறை இருக்கும் ஒரு கவசம் வணங்கினர்.
HIGHLIGHTS
ராகுல்காந்தியின் 51- வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாட்டம்.
பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தியின் 51'வது பிறந்தநாளை முன்னிட்டு. மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, இதனை அடுத்து காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும், முகக்கவசங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுகுழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், பெரம்பலூர் மாவட்ட ஓபிசி தலைவர் சாமிதுரை, வேப்பூர் வட்டார தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பாலாஜி, பெரம்பலூர் நகர தலைவர் காமராஜர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, குன்னம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சக்திவேல், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து சங்கதன் திருச்சி மண்டல தலைவர் தேனூர் கிருஷ்ணன், மக்களவைத் தொகுதி ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில் பிரசாத். பெரம்பலூர் நகர செயலாளர் நீலகண்டன், பெரம்பலூர் மகிளா காங்கிரஸ் வட்டரா தலைவர் சந்திரா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.