Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் அருகே கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
பெரம்பலூர் அருகே அன்னமங்கலத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு சில தினங்களாக 200க்கும் அதிகமாக பதிவாகி வருவகின்றது.இதில் அதிகம் கொரோனா பாதிப்பை கொண்டுள்ள பகுதியாக அன்னமங்கலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதியில் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் கொரோனா சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று அன்னமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட முகாமிற்கு ஆர்வமுடன் வருகை தந்த பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.