Begin typing your search above and press return to search.
பட்டாசு விற்பனை உரிமத்திற்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் கலெக்டர் வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
எதிர்வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில், புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம், வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் 30.09.2021-க்குள் விண்ணப்பித்துக் கொள்ள தொரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் 22.10.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மைங்களில் இணையதளம் வாயிலாக 22.10.2021-க்குள் விண்ணப்பிக்குமாறும், குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.