பெரம்பலூரில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாடம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட முயற்சி செய்துவருகிறது.இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.விவசாயிகளும் மேகதாது அணை கட்டுவதற்கு கண்டணம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மத்திய அரசையும் கர்நாடக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.மேலும் காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேரத்தலைவரை நியமனம் செய்ய வேண்டும்,வேப்பந்தட்டை அருகே பசும்பலூரில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு அளவீடு செய்து பட்டா வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர் .இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.