பெண்கள் உதவி மையம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
பெண்கள் உதவி மையம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.
HIGHLIGHTS
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.மணி, தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ், குழுவினரான அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா, காவல்நிலைய காவலர்கள் செல்வராணி மற்றும் புவனேஸ்வரி, ஆகியோர்கள் பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையால்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பெண்கள் உதவி மையம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தும், பின்னர் பெண்கள் பாதுகாப்பு மையத்தின் கட்டணமில்லாத தொலைப்பேசி எண் 181 மற்றும் 112 குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முருக்கன்குடி கிராமத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.