/* */

லாட்ஜில் விஷமருந்திய ஜோடி, பெண் உயிரிழப்பு

லாட்ஜில் விஷமருந்திய ஜோடி, பெண் உயிரிழப்பு
X

பெரம்பலூரில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த ஆண் பெண் இருவரும் விஷம் அருந்தியதில் பெண் உயிரிழந்தார்.

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சென்னையை சேர்ந்த மகேந்திர குமார் மற்றும் துறையூர் அருகே உள்ள ஏரக்குடி கிராமத்தை சேர்ந்த பூங்கொடி ஆகிய இருவரும் கடந்த 17ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அறைக்குள் சென்று உட்புறம் தாழிட்டவர்கள் இன்று காலை அறையை திறக்காத நிலையில், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறையை சோதனை செய்த போது இருவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பூங்கொடி உயிரிழந்துள்ளதும் மகேந்திர குமார் மயக்க நிலையில் இருப்பதும் தெரிய வரவே மயக்க நிலையில் உள்ள அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 20 Jan 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  3. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  5. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  8. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  9. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  10. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?