/* */

புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் உட்பட இருவர் கைது

புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் கணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் உட்பட இருவர் கைது
X
பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி, பள்ளிப்பட்டி தேவேந்திரர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தமிழ்ச்செல்வன் (25). இவரது மனைவி நந்தினி (23). மனைவியின் நடத்தையில் தமிழ்ச்செல்வனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இது சம்மந்தமாக அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில், சம்பவத்தன்று அதிகாலை நந்தினி ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருந்தார். தனது கள்ளக்காதலனுடன் தான் மனைவி பேசுகிறார் என்று, சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வன், வீட்டில் இருந்த கொடுவளால் நந்தினியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த தமிழ்ச்செல்வன், அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் அஜித் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். கோர்ட் உத்தரவுப்படி 2 பேரும் 15 நாட்கள் ரிமாண்ட் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 7 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...