/* */

கொல்லிமலையில் 13 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம்: அமைச்சர் தகவல்

கொல்லிமலையில் 13 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கூறினார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் 13 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம்: அமைச்சர் தகவல்
X

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வழங்கினார்.

கொல்லிமலையில் 13 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கூறினார்.

நாமக்கல் நராட்சி மற்றும் மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து பெற்று கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் நகராட்சி மற்றும் மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு இலவ வீட்டு மனைப்பட்டா, ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன் மூலம் நாமக்கல் நகராட்சி பகுதியில் 405 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இதுமட்டும் இன்றி, மாவட்டம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 4,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். கொல்லிமலையில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் அமைப்பதற்காக 13 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு, எக்கோ டூரிசம் சென்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம், நாமக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை 1.15 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

Updated On: 27 Dec 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு