நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
HIGHLIGHTS
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் மற்றும் சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. நாகை பேருந்து நிலையில், பழைய பேருந்து நிலையம் மற்றும் பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோல சுற்றுலா தலங்களான உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்டவைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி பேராலயம் மட்டுமின்றி, பேருந்து நிலையில், கடற்கரை சாலை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆள் அரவமின்றி காணப்படுகிறது. தொடர்ந்து ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு இடங்களில் போலீசார் கட்டுப்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.