/* */

நாகை ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்

நாகையில், ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகை ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாகை அடுத்துள்ள மஹாலக்ஷ்மி நகர் பகுதியில் புகழ்பெற்ற ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சாய்பாபா கோவிலான இவ்வாலயத்தில், இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 12-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இன்று காலை 8 மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி சாய் பாபாவை வழிபட்டனர்.

Updated On: 14 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...