நாகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
நாகை மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை தொகுப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்,
HIGHLIGHTS
நாகை மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை தொகுப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்,
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் 14,500 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதில் பத்தாயிரம் ஏக்கர் விவசாயிகளுக்கு 2 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் 100% மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது காவிரி நீர் கடைமடை பகுதி வந்ததால் நடவு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் அதேசமயம் வேளாண் துறை அதிகாரிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் . இம்மாதம் இறுதிக்குள் குறுவை பயிறுக்காண காப்பீடு செய்ய வேண்டும் என்பதால் உடனடியாக காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து குறுவை பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.