/* */

'நாகை- 30' விழாவில் கோலம் வரைந்து அசத்திய சுயஉதவி குழு பெண்கள்

‘நாகை- 30’ விழாவில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் கோலம் வரைந்து தங்களது திறமைமையை வெளிப்படுத்தினர்.

HIGHLIGHTS

நாகை- 30 விழாவில் கோலம் வரைந்து அசத்திய சுயஉதவி குழு பெண்கள்
X

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் வரைந்த கோலம்.

நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதையொட்டி 'நாகை- 30' விழா கடந்த 18ஆம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற கோலப்போட்டியில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் பங்கேற்ற ஒவ்வொருவரும், விவசாயம், மீன் பிடித்தல், சமூக நல்லிணக்கம், மும்மத வழிபாட்டு தலங்கள் என நெய்தல் நிலத்து மண்ணின் அத்தனை பண்பாட்டு பெருமைகளையும் வண்ணக்கோலங்களால் வரைந்து அசத்தினர்.

பெண்கள் வரைந்த கோலங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

இதில் குறிப்பாக கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நாகை கலங்கரை விளக்கம், உள்ளிட்ட வண்ணகோலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்த வண்ணக்கோலங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு அவர்களைப் பாராட்டினார். சிறந்த வண்ண கோலத்திற்கு நாகை 30 இறுதி நாள் விழாவில் பரிசுகள் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

Updated On: 21 Oct 2021 3:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!