Begin typing your search above and press return to search.
மீன் வளம் பெருக வேண்டி பெண்கள் நேர்த்திக்கடன்
நாகை மாவட்டத்தில் மீன்வளம் பெருக வேண்டி, முளைப்பாரியை கடலில் விட்டு மீனவப் பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. காளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரியை தலையில் சுமந்து வந்த திரளான பக்தர்கள் நாகை துறைமுகம் வரை மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில் மீன்வளம் பெருகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை காக்கவும் வேண்டி பக்தர்கள் முளைப்பாரியை கடலில் விட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.