Begin typing your search above and press return to search.
பாலமேடு பேரூராட்சி தலைவராக சுயேட்சை பெண் கவுன்சிலர் பதவியேற்பு
மதுரை அருகே பாலமேடு பேரூராட்சி தலைவராக சுயேட்சையாக வெற்றிபெற்ற பெண் கவுன்சிலர் பதவியேற்றார்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில், ஒரே ஒரு வார்டில் திமுக வேட்பாளரும், மற்ற 14 வார்டுகளில் சுயேட்சைகளே வெற்றிபெற்றனர்.
இந்நிலையில் இன்று நடந்த பேரூராட்சி தலைவர் தேர்தலில், 7வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் பா.சுமதி பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.