கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியம்
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியம் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினரால் வரையப்பட்டுள்ளது
HIGHLIGHTS
கிருஷ்ணகிரியில் ஓவியம் மூலம் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஜே.பி.கிருஷ்ணாவின் அறிவுறுத்தல் பேரில், வட்டார ஓவியர்களின் ஒத்துழைப்புடன் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் வரையப்பட்டது.
தமிழ்நாடு ஓவியர் சங்கத் துணைத் தலைவர் சத்யநாராயணன், மாவட்டத் தலைவர் கிருபாகரன், மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் புட்டராஜி, வேப்பனஹள்ளி வட்டாரத் தலைவர் ரமேஷ்பாபு, செயலாளர் தனேஷ்குமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி இந்த ஓவியம் வரையப்பட்டது.
இந்த கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை, சுந்தர், வானவில் பன்னீர், ரமேஷ், தனேஷ்குமார், சரவணன், சிவா, மாதேஷ், குப்புசாமி, பழனி, வெற்றிவேல், பாலமுருகன், சிட்டி, விக்கிரமாதித்யன், விவேகானந்தன், அருள் ரோசாரியோ ஆகியோர் வரைந்திருந்தனர்.
இந்த ஓவியத்தை டிஎஸ்பி சரவணன், அசோக்குமார் எம்எல்ஏ., ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.