Begin typing your search above and press return to search.
ரூ.5.55 கோடி மதிப்பு திட்டத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் துவங்கி வைப்பு
ரூ.5 கோடியே 55லட்சம் திட்ட மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கான கட்டுமான பணிகளை அமைச்சர் துவங்கி வைத்தார்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சின்ன ஏரியை அழகு படுத்தும் நோக்கில் தமிழக அரசு 3 கோடியே 36லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை அடுத்து சின்ன ஏரியை புனரமைத்து ஏரியை சுற்றி நடைப்பாதை அமைப்பதுடன் நகரை அழகுபடுத்தும் பணிக்கான கட்டுமானத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி இன்று பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.
அதே போல் கிருஷ்ணகிரியில் பல்வேறு வார்டுகளில் 3 கிலோ மீட்டர் தூரம் பழுதடைந்து உள்ள சாலைகளை புதிய தார் சாலைகளாக அமைக்க 2 கோடியே 19 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசந்திர பானு ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜாஸ்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.