/* */

டூ வீலரில் செல்ல அனுமதி: விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

ஊரடங்கின்போது விவசாயிகள் டூவீலரில் தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

டூ வீலரில் செல்ல அனுமதி: விவசாயிகள் சங்கம்  அரசுக்கு கோரிக்கை
X

ஊரடங்கின் போது, விவசாயிகள் தங்குதடையின்றி விளை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதில், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என அரசு அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு இரு சக்கர வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் வீடுவரை டூவீலரில் வர வேண்டும். விளைப் பொருட்களை சந்தையில் விற்று மீண்டும் அதே வாகனத்தில் வீடு திரும்ப வேண்டும். மாங்காய், தேங்காய், காய்கறி, கீரை வகைகள் அறுவடை செய்ய கூலியாட்கள் வாகனத்தில்தான் செல்ல வேண்டும்.

இவர்கள் அனைவருக்கும் பாஸ் வழங்க முடியாது. இதனால் போலீசாருக்கு அறிவுரை வழங்கி, விவசாயி என்று தெரிந்தால் அவரை அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளது.

Updated On: 10 May 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு