Begin typing your search above and press return to search.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி நகர் நான்காவது தெருவில் வசிக்கும் 29 வயது பெண், 61 வயது முதியவர், 32 வயது பெண், 51வயது பெண், 30 வயது ஆண் என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் அந்த பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். மேலும் மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு வேறு யாருக்கும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். அத்துடன் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. அதே போல சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.