/* */

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழி காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழி காட்சிக்கு வைப்பு
X

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், மாதந்தோறும் ஒரு அரியபொருள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2021 மாத சிறப்புக் காட்சிப் பொருளாக, 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் இன்று கோவிந்தராஜ் கூறியதாவது:

இது, சிறிய வகை தாழியாகும். வழவழப்பாக்கப்பட்ட சிவப்பு வண்ண பானை வகையைச் சேர்ந்தது. வெளிப்பகுதி அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளிம்புப்பகுதி உடைந்துள்ளது. இறந்தவர்களின் நினைவாக பெரிய கற்களைக் கொண்டு கற்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல், கல்வட்டம் என பல வகையான நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளனர். அதனுள் இத்தகைய தாழி அல்லது விலங்கு வடிவிலான சுடுமண் பெட்டி வைத்திருப்பர்.

பொதுவாக முதுமக்கள் தாழியானது, 4 அடி உயரத்தில் 2 அடி விட்டத்தில் இளஞ்சிப்பு நிறத்தில் மணல் கலந்து செய்யப்பட்டிருக்கும். அதன் அடிப்பகுதி கூம்பு போல் இருக்கும். இது பெண்களின் கர்பப்பையை உருவகப்படுத்துவதாகும். இறந்தவர்கள் மீண்டும் கர்ப்பப் பைக்குள் சென்று மறுப்பிறப்பு எடுப்பதாகக் கருதும் அக்கால மக்களின் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. இத்தகைய தாழிக்குள் அவர்களது முக்கிய எலும்புகள் சிலவற்றோடு அவர்கள் பயன்படுத்திய இரும்புக்கருவிகள் வைத்திருப்பர்.

அருங்காட்சியில் உள்ள இத்தாழியானது, கிருஷ்ணகிரி வட்டம் பீமாண்டப்பள்ளியில் கிடைத்ததாகும். இதனுள் இறந்த குழந்தை ஒன்றின் ஒரு சில எலும்புகளை வைத்து புதைத்து, புதைவிடத்தில் பெரியகற்களைக் கொண்டு நினைவுச் சின்னம் எழுப்பியிருக்க வேண்டும். சங்க இலக்கியங்கள் இதனை முதுமக்கள் தாழி எனக் குறிப்பிடுகின்றன. இரும்பின் பயன்பாட்டை மனிதன் முதன்முதலாகக் கண்டறிந்த காலம் இது. இத்தகைய முதுமக்கள் தாழிகளை, நிலத்தில் பொதுமக்கள் கண்டால் அதனை உடைத்துவிடாமல் அருங்காட்சியகத்துக்கு 9443442991 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

Updated On: 15 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...