Begin typing your search above and press return to search.
மாநில தகவல் ஆணையர் மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.
HIGHLIGHTS
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது கடந்த இரு தினங்களாக ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தனசேகரன். தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 ன் படி கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 31 இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தொடர்புடைய மனுதாரர்கள் மற்றும் தொடர்புடைய பொதுதகவல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.
பொதுத் தகவல்கள் அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வழங்கப்படாமல் உள்ள காரணங்கள் குறித்தும், இன்னும் எவ்வளவு நாள்களுக்குள் தகவல்கள் வழங்க முடியும் என ஒவ்வொரு மனுவாக விசாரித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டபடி, மனுதாரர்களுக்கு சட்ட வரைமுறைப்படி காலம் தாழ்த்தாமல் தகவல்களை வழங்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.