Begin typing your search above and press return to search.
சோமவார பிரதோஷ நிகழ்ச்சி: நந்தி எம்பெருமானை தரிசித்த பக்தர்கள்
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பிரதோஷ நிகழ்ச்சியில் பக்தர்கள் வழிபட்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில், மிகவும் சிறப்பு வாய்ந்த சிவாலயமாகவும், மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகவும் இருப்பது கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்.
இங்கு, மாசி மாத பிரதோஷம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் ஈஸ்வரனுக்கு முன்னர் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு, விஷேச பூஜைகளும், கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்திகளை தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, நந்தி எம்பெருமான் அருள் பெற்றனர். சிவாச்சாரியார்கள் சூழ, ஓதுவார் திருவாசகம் படிக்க, விஷேச சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.