Begin typing your search above and press return to search.
கரூர் பாஜகவில் ஒரு லட்சம் பேரை சேர்க்க திட்டம்
கரூர் தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் புதிதாக ஒரு லட்சம் பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவராக செந்தில்நாதன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாஜக கரூர் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் பாஜகவில் சேர்க்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என பேசினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளிடையே பாஜக வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துகளையும், அடுத்த 50 நாள்களுக்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.