Begin typing your search above and press return to search.
பேரிடர் கால மீட்புப்பணிகள்: தீயணைப்புத் துறை செயல் விளக்கம்
கரூர் அமராவதி ஆற்றில் மழை வெள்ள காலங்களில் சிக்கிக் கொள்ளும் நபர்களை மீட்பது குறித்து தீயணைப்புத் துறை செயல் விளக்கம்
HIGHLIGHTS
கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் பேரிடர் காலங்களில் பெருவெள்ளத்தில் சிக்கும் நபர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அதில் ஆற்றில் மிதந்து செல்லும் நபர்களை டியூபை இடுப்பில் கட்டிக்கொண்டு நீந்தி சென்று காப்பாற்றுவது, காயம்பட்ட நபர்களை மீட்டு, அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது குறித்தும், மழை வெள்ள காலங்களில் ஆற்றில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது குறித்தும் செயல்முறை விளக்கத்தை அளித்தனர்.
மேலும் நிலச்சரிவிலிருந்து தப்பித்துக் கொள்வது குறித்த விளக்க உரையையும் தீயணைப்பு வீரர்கள் அளித்தனர்.