குமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், மாவட்டத்தில் தொற்று குறைய தொடங்கியது. இதனிடையே சமீப நாட்களாக குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 2039 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், 2015 பேருக்கு பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. 24 பேருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. மேலும் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு மாநகராட்சி பணியாளர்கள் கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தடுப்பு நடவடிக்கைகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu