Begin typing your search above and press return to search.
9 ஆண்டுகளாகியும் முடிவுறாத பாதாள சாக்கடை பணி: பொதுமக்கள் அவதி
குமரியில் 9 ஆண்டுகளை கடந்தும் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐந்து ஆண்டுகளில் முடியும் எனக்கூறி தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் 9 ஆண்டுகளை கடந்தும் முடிவுராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கான பணிகள் முடியாமல் இருக்கும் நிலையில் முக்கிய சாலைகளை தோண்டி போட்டு இருப்பதால் மாணவ, மாணவிகள் முதியோர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்ல முடியாத அளவில் சாலைகள் தோண்டப்பட்டு இருப்பதால் வியாபாரம் முடங்கிய நிலையில் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.