Begin typing your search above and press return to search.
சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
குமரியில், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
HIGHLIGHTS
பாரதீய ஜனதா கட்சியின் தோவாளை மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் விஜய் மணியன் தலைமையில், ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேல விளாங்காடு பகுதியில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், வடக்கு பக்கம் மணப்பாறை பகுதியில் உள்ள சுடுகாட்டு கொட்டகையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது. இந்த வழியாக இறந்த உடலை எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சரி செய்ய வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.