/* */

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை - சாராய வியாபாரி கைது

முழு ஊராடங்கை பயன்படுத்தி வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை - சாராய வியாபாரி கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பகுதியில் சாராய விற்பனை படு ஜோராக நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பூதபாண்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கீழ புளியடி, அருமநல்லூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குகிடமாக ஒருவர் நின்று கொண்டு இருப்பதை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா(33) என்பதும் அவர் சட்டத்துக்கு விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரை பிடித்து அவரது வீட்டை சோதனை செய்த போது அங்கு 1 லிட்டர் கள்ள சாராயம் மற்றும் 3 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் ராஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 1 லிட்டர் சாராயம் மற்றும் 3 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி