Begin typing your search above and press return to search.
குமரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்கிழக்கு வங்ககடலில் புதிதாக உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
இதனால் தாமிரபரணி, வீரானமங்களம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் இருக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.