/* */

எந்தத் தொகுதி வாக்காளராக இருந்தாலும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்..!

அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி காஞ்சிபுரம் காந்தி சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

எந்தத் தொகுதி வாக்காளராக இருந்தாலும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்..!
X

காந்தி சாலை காய்கறி வியாபாரியிடம் இரட்டை இலைக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன்

எந்தத் தொகுதி வாக்காளராக இருந்தாலும், இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களியுங்கள் என காஞ்சி பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் அதிமுக வளர்மதி வாக்காளரிடம் வாக்குகள் சேகரித்தார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ராஜசேகர் என்பவர் போட்டியிடுகிறார். கடந்த ஆறு தினங்களாகவே காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் , முன்னாள் அமைச்சருமான வளர்மதி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகர அதிமுக சார்பில் காந்தி சாலையில் உள்ள பட்டு சேலைக் கடைகள் , சாலை ஓர வியாபாரிகள், ராஜாஜி காய்கறி சந்தை பகுதி, தேரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சோமசுந்தரம் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பிரபல பட்டு ஜவுளிக்கடையில் பட்டுப்புடவையில் வாங்கி இருந்த பெண்மணியம் வாக்கு சேகரித்த போது அவர் தான் கிருஷ்ணகிரி தொகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்த போது , எந்த தொகுதி வாக்காளர்களாக இருந்தாலும் , இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் எனவும், டீக்கடையில் பஜ்ஜி சுட்டும், பூ வியாபாரிக்கு பூ தொடுத்தும் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை செயலாளர் கே.யு எஸ் சோமசுந்தரம், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 April 2024 1:00 PM GMT

Related News