Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் மண்டபத்தில் அத்தி வரதர் சிலை அமைக்கப்படும்: அர்ஜீன்சம்பத்
காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் மண்டபத்தில் அத்தி வரதர் சிலையை இந்து மக்கள் நிறுவ உள்ளதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
HIGHLIGHTS
இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார் அதன்பின் அத்தி வரதர் குளம் மற்றும் சக்கரத்தாழ்வார் தரிசனம் மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய போது , கோடிக்கணக்கான மக்கள் தரிசித்த அத்தி வரதரின் நின்ற மற்றும் சயன கோலத்தில் திரு உருவ சிலைகள் அல்லது படங்களாகவும் அனந்தசரஸ் மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக வைக்கப்படும்.
மேலும் கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாளை சரியாக திமுக அரசு கொண்டாடவில்லை எனவும் இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும்,
குற்றவியல் நடைமுறை சட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒன்றாக இருக்கும் போது சிறிது சட்டத்தில் உள்ள பாகுபாடுகளைக் களைய சிவில் சட்டத்தை முறையாக அனைவருக்கும் பொதுவாக இயற்ற வேண்டும் என தெரிவித்தார்.