/* */

உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

மண் காப்போம் நிகழ்ச்சியினையொட்டி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் என்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சுழற் சங்க மாவட்ட ஆளுநர் பி.பரணீதரன் தலைமை வகித்து மரக் கன்றுகளையும் நட்டார். மருத்துவர்கள் சரவணன், மனோகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மண் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக பேசினார்.

மண் காப்போம் என்ற பதாகையை ஈஷா அறக்கட்டளையின் தொண்டர்கள் பலரும் கையில் பிடித்தவாறு மரங்களைக் காப்போம், மண்ணைக் காப்போம் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள். மண்ணைப் புத்துயிர் பெறச் செய்வது எப்படி என்ற தலைப்பில் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எழிலன் பேசினார். காஞ்சி அன்னச்சத்திர நிர்வாகி மோகன் உட்பட ஈஷா அறக்கட்டளையின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  7. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  8. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!