நவராத்திரி நிறைவையொட்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மனுக்கு பட்டு நூல் அலங்காரம்
நவராத்திரி நிறைவினையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மன் பட்டு நூல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக விமர்சையாக பல தரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டு வந்தது.
வீடுகளில் பெண்கள் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டும் , ஆலயங்களில் உற்சவர் மற்றும் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு நாள்தோறும் வண்ண வண்ண பூக்களால் அமைக்கபட்ட நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
நவராத்திரி நிறைவையொட்டி இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் காமாட்சி அம்மனுக்கு வண்ண வண்ண பட்டு நூல் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. காமாட்சி அம்மனுக்கு மேலும் அலங்கார சிறப்புகள் செய்ய மயிலிறகு, பாதாம், முந்திரி , பிஸ்தா , ஏலக்காய், மஞ்சள்துண்டு உள்ளிட்ட மாலைகளும் அணிவிக்கப்பட்டு ஏகாந்தமாக மண்டபத்தில் எழுந்தருளி காலை முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதுவரையில் இதுபோன்ற அலங்கார வடிவமைப்பில் காஞ்சி காமாட்சி அம்மனை பக்தர்கள் தரிசிக்க இல்லை. இன்று அரசு தளர்வுகள் அறிவித்த நிலையில் விடுமுறை தினமும் என்பதால் பல மாவட்ட மக்கள் இதுபோன்ற சிறப்பு அலங்காரங்கள் காமாட்சி அம்மனை தரிசித்து மகிழ்ச்சி கொண்டு மன நிறைவுடன் வீடு திரும்பியுள்ளனர்.