/* */

முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன்  பெண்கள் சாலைமறியல்
X

காஞ்சிபுரம், வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத மழை பெய்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையோர பகுதியில் அமைந்துள்ள குடிநீர் இணைப்பு அனைத்தும் சேதமடைந்து, காஞ்சிபுரம் நகர் மற்றும் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காத பகுதிகளில், லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அறிவுறுத்தபட்டது. அதன் அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட்டு, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு தெருவில், ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என, அப்பகுதி பெண்கள் 20க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதி வழியாக வந்த, தனிப்பிரிவு ஆய்வாளர் பிரபாகரன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்து, மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 17 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!