காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக மாவட்டத்தில் 95 சதவீத ஏரிகள் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் நடப்பு சம்பா பருவத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடபட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மாவட்டம் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேளாண் துறையுடன் இணைந்து செயல்பட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.
இவ்வகையில் நான்காவது நேரடி நெல் கொள்முதல் நிலையமாக காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விவசாயிகளுடன் இணைந்து கொள்முதல் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியவதி தேவி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 45 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , களக்காட்டூர் நாலாவது நிலையம் எனவும் வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பருவத்தில் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளிடமிருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.