Begin typing your search above and press return to search.
திமுக இளைஞர் அணி சார்பில் பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு
கோடை காலத்தினையொட்டி பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் அமைக்கபட்டு மோர் , இளநீர் , தர்பூசணி , குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து வெயில் கடுமையாக மக்களை வாட்டி வதைக்கின்றது. இந்த நிலையில் கோடை வெப்பத்தை தனிக்க பல்வேறு கட்சியினர் பல இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
காஞ்சிபுரம் எம்.பி செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் , திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.