/* */

ஆட்சியில் நேர்மையில்லை என்பதாலே கூட்டணியை ஆண்ட கட்சிகள் தேடுகின்றனர் - சீமான்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமாரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காஞ்சிபுரத்தில் வாக்குகள் சேகரித்தார்.

HIGHLIGHTS

ஆட்சியில் நேர்மையில்லை என்பதாலே கூட்டணியை ஆண்ட கட்சிகள் தேடுகின்றனர் - சீமான்
X

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமாரை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது.

ஆட்சி ஆளும்போது நேர்மை இல்லை என்ற காரணத்திலேயே கூட்டணிகளை ஆண்ட கட்சிகள் தேடுகிறது எனவும் ,தேர்தல் புறக்கணிப்பு என்பதை தவிர்த்து விட்டு, பிரச்சனைகளை இன்று முன்னின்று தீர்வு காண்போம் என்ற கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

தமிழக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

இன்னும் 13 நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை தொடர்ந்து காலை 6:00 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர் பிரச்சை கடும் வெயிலினை பொறுப்படுத்தாது பிரசாரம் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்போரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடையேதீவிர வாக்கு சேகரித்தார்.


காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரையில் ஈடுபட்ட சீமான், கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவும் அதற்கு முன்பும் காங்கிரசும் நம்மை ஆண்ட நிலையில் இதுவரையிலும் எந்த ஒரு நல திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தவில்லை எனவும், தமிழகத்தில் உள்ள திமுக கடந்த தேர்தலில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தும் எந்த ஒரு நல திட்டங்களையும் செயல் படுத்தவில்லை என்பதும், பிரச்சனைகள் பேசி தீர்வு கண்டதும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

பாஜக அதிமுக திமுக காங்கிரஸ் என நான்கு கட்சிகளும் ஆண்ட கட்சிகள் ஊடக வலிமை பொருளாதார வலிமை என இருந்தும், நேர்மை இன்மை காரணமாக தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல் பயந்து கூட்டணிக்கு தேடுகிறது. நான்கு கட்சிகளின் கொள்கைகளையும் மாற்றும் இல்லை.

ஆனால் நாங்கள் மக்களை முழுமையாக நம்பி இறங்கி உள்ளோம். இதன்பின் செய்தியாளிடம் பேசுகையில் , தேர்தல் புறக்கணிப்பு என்பதை தவிர்த்து விட்டு தங்களது பிரச்சனைகளை முன்னின்று தீர்வு காணும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார்.

கடும் வெயிலிலும் பொருட்படுத்தாது தீவிர தேர்தல் பிரசாரத்தில் மேற்கொண்ட போதும் அக்கட்சி தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Updated On: 6 April 2024 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  3. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  4. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  5. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  7. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  9. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  10. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...