/* */

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை பட்டா மாற்றி அரசுக்கே விற்ற வழக்கில் இருவர் கைது..!

சென்னை - பெங்களூரு விரைவு சாலைக்கு நிலம் எடுத்த விவகாரத்தில் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் முதன்முறையாக 7.5 ஏக்கர் விற்ற இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை பட்டா மாற்றி அரசுக்கே விற்ற வழக்கில் இருவர் கைது..!
X

சென்னை பெங்களூரு விரைவு சாலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பீமன் தாங்கள் கிராமத்தில் அரசு நிலத்தை பட்டா மாற்றி அரசுக்கு விற்ற வகையில் அரசுக்கு சுமார் 200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் நான்கு நில எடுப்பு அலுவலர்கள் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் முதல் குற்றவாளியான நிலம் ஏமாற்றி விற்ற சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் என்கிற ஆஷிஷ் மேத்தா மற்றும் அவரது நிலத்தை பவர் வாங்கிய ஸ்ரீபெரும்புதூர் , சிவன் தாங்கல் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகியோர் 7.5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு விற்றது உறுதியானது.

அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக முதல்முறையாக இரு நிலம் விற்றவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களைத் தொடர்ந்து பலர் கைது செய்யக் கூடும் என மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர்.



Updated On: 23 Jun 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்