கொரோனா விதிமீறல்: பிரபல ஜவுளிக்கடைகளுக்கு சீல்!
காஞ்சிபுரத்தில், கொரானா விதிமுறைகளை மீறியதாக பிரபல ஜவுளிக்கடைகளுக்கு அபராதம் விதித்து, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
HIGHLIGHTS
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 3 ஆயிரம் சதுரஅடி அளவுள்ள, கடைகளை மூட வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் செயல்படுட்டடு வந்த 50க்கும் மேற்பட்ட கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதனிடையெ, முகூர்த்த நாளான நேற்று, பட்டுச்சேலை எடுக்கவும் துணிமணிகள் வாங்கி விடவும் ஏராளமான மக்கள் காஞ்சிபுரம் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து, மூடப்பட்டிருந்த பட்டுச்சேலை கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவை முன்பக்கம் மூடிய நிலையில், பின்பக்க கதவை திறந்து வைத்து, பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் செய்துவந்தன.
இதுகுறித்து தகவலறிந்த பெருநகராட்சி நிர்வாகத்தினர், காந்தி சாலை, காமராஜர் சாலை, வள்ளல் பச்சையப்பர் தெரு பகுதியில், திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது, பின்பக்க கதவை திறந்து வைத்திருந்த கடைகளுக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.
மேலும், பின்பக்க கதவை திறந்து வைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை மீறி, பொதுமக்களை அதிக அளவில் அனுமதித்து வியாபாரம் செய்து வந்த, ௩ பிரபல துணிக்கடைகக்கு, பெருநகராட்சி ஆணையர் மகேஷ்வரி அபராதம் விதித்து சீல் வைத்தார்.