/* */

காஞ்சிபுரம் சித்த மருத்துவர்கள் அசத்தல்! 20 நாளில் 194 பேர் குணம்!!

காஞ்சிபுரத்தில் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 20 நாட்களில் 194 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் சித்த மருத்துவர்கள் அசத்தல்! 20 நாளில் 194 பேர் குணம்!!
X

காஞ்சிபுரம் சித்த மருத்துவப் பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா முத்திரை கற்றுத் தரும் கவச உடை அணிந்த சித்த மருத்துவர்,

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

மையம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 232 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 194 பேர் 20 நாட்களில் குணமடைந்து விட்டதாகவும், எஞ்சிய 38 பேர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு காலையில் மஞ்சள்பொடி, உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தல், மூலிகை தேநீர், எட்டு வடிவ நடைபயிற்சி, உடற்பயிற்சிகள், வர்மம் மற்றும் கைவிரல்களால் நோயை குணப்படுத்த கூடிய முத்திரைப் பயிற்சிகள், கபசுரக் குடிநீர் ஆகியன வழங்கப்படுகின்றன.

மாலையில் சுவையின்மைக் குறைவை போக்க ஓமப்பொட்டலம் நுகர்தல், தேன் கலந்த ஆரோக்கிய பானம், 3 வேளையும் உணவு, நெல்லிச்சாறு ஆகியனவும் வழங்கப்படுகிறது. குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கும் நெல்லிக்காய் லேகியம், உடல் வலியை நீக்கும் அமுக்கரா சூரண மாத்திரை ஆகியன அடங்கிய மருந்துப் பெட்டகமும் கொடுத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Updated On: 6 Jun 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது