Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ப.கணேசன் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ப.கணேசன் இன்று அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த திவாகர் கடந்த மே மாதம் சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப் பட்டார். காஞ்சிபுரத்தில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த சதீஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக கடந்த 5 மாதங்களாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து மாற்றலாகி வந்த ப.கணேசன் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்கண்ட அலுவலகத்தில் பணியாற்றி வரும் சக ஊழியர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரான ப.கணேசனை வரவேற்றனர். இதன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.