/* */

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி

மளிகை பொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, சிலிண்டர் விலை உயர்ந்ததால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி
X

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் அவ்வப்போது உயர்ந்து கொண்டிருந்தது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாத நிலையில் இன்று வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்துள்ளது.

நேற்று ரூ.967 க்கு விற்பனை செய்யபட்ட நிலையில் இன்று ரூ 1,017 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோக டெலிவரி சார்ஜ் ரூ30 பெறும் நிலையில் தற்போது மொத்தமாக ரூ1,050 அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

வணிக எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.2250 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மளிகை பொருட்கள், சமையல்‌ எண்ணெய், அரிசி என அனைத்தும் 20 சதவீத விலையேற்றம் கண்ட நிலையில், இன்று சிலிண்டர் விலையும் உயர்ததுள்ளது, நடுத்தர குடும்ப மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் தொடங்கி நகர்புற மக்கள் வரை இலவச எரிவாயு எனும் திட்டத்தின் கீழ் சிலிண்டர் அடுப்பு வழங்கி மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டு தற்போது மெல்ல மெல்ல விலையேற்றத்தை அளித்து வருகின்றனர். வாழ்வாதாரம் மேம்பட கூலி உயர்வு, சம்பள உயர்வு என்றும் ஏதும் இல்லாத இந்த நிலையில் இது நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வை பெரிதும் பாதிக்கும் என தெரிவித்தனர்.

Updated On: 7 May 2022 5:30 AM GMT

Related News