திமுக நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக்கூட்டம்: எம்எல்ஏ எழிலரசன் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி எம்எல்ஏ எழிலரசன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் உள்ள 274 ஊராட்சி மன்ற தலைவர் களுக்கும் 5 ஒன்றிய குழுக்களுக்கும் மாவட்ட ஊராட்சிகளுக்கும் தேர்வு நடைபெற்று தற்போது தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பணி புரிந்து வருகின்றனர்.
அவ்வகையில் இன்னும் சில மாதங்களில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்டவைகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களிடம் விருப்பம் மூலம் பெற்றுக் கொண்டு பட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பொது மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகர 32வது வார்டு கழக ஆய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நகர் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்துகொண்டு வட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன், கே.ஏ.செங்குட்டுவன், கார்த்திக், மைடிவி மூர்த்தி உள்ளிட்ட வட்ட நிர்வாகிகள் வட்ட உறுப்பினர்கள் கழக முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.