பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கல்
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக பல்வேறு விதமான தொழில் தொடங்க தொழிற்கடனுதவி மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட தொழில் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு 29 நபர்களுக்கு 96 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு 68 லட்சமம் வழங்கப்பட்டது.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 4 நபர்களுக்கு 2.98 லட்சம் பாரத பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கு உதவும் திட்டத்தின்கீழ் 90.40 லட்சம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 37 நபர்களுக்கு 61.40 லட்சம் மகளிர் திட்டத்தின் மூலம் 2,128 குழுக்களுக்கு 104 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு அடைந்துள்ளது. மேலும் புதிதாக தொழில் முனைவரகள் தொழில் தொடங்கி மாவட்டத் தொழில் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.