உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.38 லட்சம நிதியுதவி
திண்டுக்கல் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.38,77,905 நிதியுதவி அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்ட நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் அன்னை இந்திரா என்பவர். இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். காவலர் குடும்பத்தின் நலன் கருதி அவருடன் 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் நிதி திரட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா முன்னிலையில் அன்னை இந்திராவின் குடும்பத்தாருக்கு ரூபாய் 13,77,905/- வழங்கினார்கள்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நாட்டுதுறை என்பவர் கடந்த 03.06.2021 ம் தேதி உயிரிழந்தார். காவலரின் குடும்ப நலன் கருதி அவருடன் 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் நிதி திரட்டி நாட்டுதுறையின் மகள் வங்கிக் கணக்கில் ரூபாய் 25 லட்சத்தை டெபாசிட் செய்தனர்.
காவல்துறையின் இச்சேவைக்கு உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.