/* */

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்
X
திண்டுக்கல் நகரில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கரும்பு ,மஞ்சள் கிழங்கு ,மா இலை தோரணம், தேங்காய், பழம் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

இதனால் நகரின் நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினரோ, போக்குவரத்து காவல் துறையினரோ இல்லாத காரணத்தினால் நீண்ட நேரமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் காத்திருக்கும் அவலமானது ஏற்பட்டது.

மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெரும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

Updated On: 14 Jan 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  3. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  9. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  10. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை