Begin typing your search above and press return to search.
கிருஷ்ண ஜெயந்தி விழா: உரியடி திருவிழாவை துவக்கி வைத்த அதிமுக அம்மா பேரவை
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற உரியடி திருவிழாவை அதிமுக அம்மா பேரவை இணைச் செயலளார் ஆர் வி என் கண்ணன் துவங்கி வைத்தார்.
HIGHLIGHTS
திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உரியடி திருவிழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் கண்ணன், ராதை வேடம் அணிந்து திருவிழாவில் காட்சி அளித்தனர். மேலும் கழக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் ஆர்.வி.என் கண்ணன் கலந்து கொண்டு உரியடி திருவிழாவை துவக்கி வைத்தார். இளைஞர்கள் ஒருபுறம் தண்ணீரை ஊற்ற கையில் தடியுடன் ஒரு இளைஞர் உரியை அடிக்க முயன்ற காட்சி விழாவிற்கு வந்திருந்த பக்தர்களை ரசிக்கச் செய்தது. கிருஷ்ண ஜெயந்தி உரியடி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊர் நிர்வாக குழு சார்பாக அன்னதானம் வழங்கினர்.