/* */

திண்டுக்கல், சிறுமலை விவசாயிகள் குதிரைப் பொங்கல் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல், சிறுமலையில் விவசாயிகளின் உற்ற நண்பனாய் விளங்கக்கூடிய குதிரைகளுக்கு பொங்கல் விழா எடுத்து கொண்டாடினர்.

HIGHLIGHTS

திண்டுக்கல், சிறுமலை விவசாயிகள்  குதிரைப் பொங்கல் விழா கொண்டாட்டம்
X

குதிரைப்பொங்கல் கொண்டாடும் விவசாயிகள்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் மாட்டு பொங்கலை முன்னிட்டு குதிரை பொங்கல் விழா நடைபெற்றது. சிறுமலை பகுதிகளில் விளையும் பலா, வாழை, சவ்சவ் ஆகிய விளை பொருட்களை, விளை நிலங்களில் இருந்து கரடுமுரடான பாதைகளில் கொண்டு செல்வதற்காக குதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பழையூர், புதூர், தென்மலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்த்து வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் தங்களுக்கு உற்ற நண்பனாய் இருந்து பொதி சுமக்கும் குதிரைகளுக்கு இன்று குதிரை பொங்கல் வைத்து கொண்டாடினர். இதற்காக குதிரைகளை குளிப்பாட்டி, வண்ண சாயங்களால் பொட்டு வைத்து அலங்காரம் செய்தனர். பின்னர் அவரவர் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனுக்கு தேங்காய், பழம், கரும்பு படையல் வைத்து குதிரைகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஊட்டி குதிரை பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Updated On: 16 Jan 2022 1:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்